search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலியோ சொட்டு மருந்து முகாம்"

    ஊட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். #PolioDropsCamp
    ஊட்டி:

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சிறப்பு வாகனங்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க பயன்படுத்தப்படுகிறது.

    பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட், சோதனைச்சாவடிகள், 29 கோவில்கள், 52 கிறிஸ்தவ ஆலயங்கள், 6 மசூதிகள் மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நகர்புற பகுதிகளில் 135 போலியோ சொட்டு மருந்து முகாம்களும், கிராம பகுதியில் 635 போலியோ சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட அளவில் 42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயினை அறவே ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #PolioDropsCamp
    மதுரை மாவட்டத்தில் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 2,85,400 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #Polio
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் நாளை (ஞாயிறு) போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 2,85,400 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிறந்தது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகாமில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

    குறிப்பாக வேறு மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல், நரிக்குறவர், இலங்கை அகதிகள் ஆகியோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும்.

    இந்த சொட்டு மருந்து மையங்கள் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், சத்துணவு மையங்களில் அமைந்துள்ள சொட்டு மருந்து வழங்கும் பூத்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும்.

    இதை தவிர்த்து நடமாடும் குழுக்கள் மூலமாகவும் பஸ் நிலையம், புகைவண்டி நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பூத்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்படும்.

    சொட்டு மருந்து வழங்கும் பணியை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிககள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து சுகாதாரத் துறை மூலமாக 9 மேற்பார் வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 200 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தப்பணியில் சுகாதாரத்துறை மூலமாக 1,167 பணியாளர்கள், சத் துணவுத்துறை மூலமாக 2,490 பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக 85 பணியாளர்கள் உட்பட 7412 பணியாளர்கள் ஈடுபடு கிறார்கள்.

    முகாமிற்கு தேவையான பொது சுகாதாரத்துறையைச் சேர்ந்த வாகனங்கள் 44 மற்றும் பிற துறை வாக னங்கள் 73 ஈடுபடுத்தப்பட உள்ளன.

    இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து போட்டிருந்தாலும், இந்த சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாது போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முழுமையாக ஒழிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Polio
    ×