என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்14 Jan 2021 7:30 AM GMT (Updated: 14 Jan 2021 7:30 AM GMT)
கொளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொளத்தூர்:
கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலை பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகலிங்கம் (வயது 17), சிவா (17), மஞ்சுநாத் (17). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கொளத்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது காரைக்காடு அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நாகலிங்கம் வழியிலேயே இறந்தார். சிவா, மஞ்சுநாத் ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X