என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொண்டகுப்பத்தில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
Byமாலை மலர்13 Jan 2021 11:59 AM GMT (Updated: 13 Jan 2021 11:59 AM GMT)
கொண்டகுப்பத்தில் உழவு பணியில் ஈடுபட்டபோது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் அருகே உள்ள கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50). விவசாயி. இவர் நேற்று முன்தினம் கொண்ட குப்பம் பகுதியில், டிராக்டரில், விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் டிராக்டரை ஓட்டிய ரவி மீது, டிராக்டர் விழுந்து அமுக்கியதில் அவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி டிராக்டர் அடியிலேயே மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X