என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே மின் கம்பியில் பஸ் உரசியதில் 3 பயணிகள் பலி
Byமாலை மலர்12 Jan 2021 8:15 AM GMT (Updated: 12 Jan 2021 8:15 AM GMT)
தஞ்சையில் இருந்து திருவையாறுக்கு இன்று மதியம் புறப்பட்ட தனியார் பஸ் மின் கம்பியில் உரசியதில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இருந்து இன்று மதியம் தனியார் பஸ் திருவையாறு நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் திருவையாறை அடுத்த வரகூர்-கண்டியூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மின்கம்பியின் மீது பஸ் உரசியது. இதில் பஸ்சில் இருந்த 5 பேருக்கு மின்சாரம் தாக்கியது. உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயயே உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த திருவையாறு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த 3 பேர் யார்? என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் காயமடைந்த 10 பேரில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சையில் இருந்து இன்று மதியம் தனியார் பஸ் திருவையாறு நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் திருவையாறை அடுத்த வரகூர்-கண்டியூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மின்கம்பியின் மீது பஸ் உரசியது. இதில் பஸ்சில் இருந்த 5 பேருக்கு மின்சாரம் தாக்கியது. உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயயே உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த திருவையாறு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த 3 பேர் யார்? என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் காயமடைந்த 10 பேரில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X