என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டயர், பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்த வேண்டாம்- மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்
Byமாலை மலர்12 Jan 2021 5:41 AM GMT (Updated: 12 Jan 2021 5:41 AM GMT)
போகி பண்டிகையின் போது ரப்பர், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை:
போகி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை தினத்தில், வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழிப்பதற்காக அவற்றை எரிப்பார்கள். அப்போது சிறுவர்கள் சிறிய மேளங்களை கொட்டி ஆரவாரம் செய்வார்கள்.
இதில் டயர், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை எரிப்பதால் கரும்புகை ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுவாசிக்க சிரமம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது.-
போகி பண்டிகையின் போது ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக், ரசாயனம் கலந்து பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அந்த பொருட்களில் இருந்து வெளிப்படும் நச்சுப் புகையால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே, இது போன்ற பொருட்களை எரிப்பதை தவிர்த்து போகி கொண்டாட வேண்டும்.
போகி பண்டிகையின் போது காற்று மாசு ஏற்படுவது குறித்து கண்காணிக்கப்படும். 15 இடங்களில் காற்றின் தரம் கண்டறியப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போகி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை தினத்தில், வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழிப்பதற்காக அவற்றை எரிப்பார்கள். அப்போது சிறுவர்கள் சிறிய மேளங்களை கொட்டி ஆரவாரம் செய்வார்கள்.
இதில் டயர், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை எரிப்பதால் கரும்புகை ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுவாசிக்க சிரமம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது.-
போகி பண்டிகையின் போது ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக், ரசாயனம் கலந்து பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அந்த பொருட்களில் இருந்து வெளிப்படும் நச்சுப் புகையால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே, இது போன்ற பொருட்களை எரிப்பதை தவிர்த்து போகி கொண்டாட வேண்டும்.
போகி பண்டிகையின் போது காற்று மாசு ஏற்படுவது குறித்து கண்காணிக்கப்படும். 15 இடங்களில் காற்றின் தரம் கண்டறியப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X