என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் திருட்டு
Byமாலை மலர்12 Jan 2021 2:25 AM GMT (Updated: 12 Jan 2021 2:25 AM GMT)
சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் புதுத்துணிகள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
சரவணம்பட்டி:
கோவை சரவணம்பட்டி அண்ணாநகர் சேர்மன் தோட்டத்தை சேர்ந்த வர் ராமசாமி. இவருடைய மகன் கணேசன் (39). இவர் சரவணம்பட்டி பகுதியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர், கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தாளவாடி சென்றார். அவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் புதுத்துணிகள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். சரவணம்பட்டி காவல் நிலைய பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் நடந்த 10-வது திருட்டு சம்பவம் இதுவாகும். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X