என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி
Byமாலை மலர்10 Jan 2021 11:18 AM GMT (Updated: 10 Jan 2021 11:18 AM GMT)
பல்லடம் அருகே சாலையோரத்தில் இருந்த குழியில் மோட்டார் சைக்கிள் விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பல்லடம்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 51). இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்திற்கு சென்று வேலையை முடித்து விட்டு இரவு வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில், பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் அய்யம்பாளையம் என்ற இடம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த குழியில் மோட்டார் சைக்கிளில் இறங்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியே சென்றவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X