search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு

    நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
    சென்னை:

    நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அண்மையில் சென்னை வந்திருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக நேற்று அதிகார பூர்வமாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் போலியோ சொட்டு மருந்து முகாமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    இதனிடையே மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×