என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தட்டார்மடம் அருகே போலீசாரை தாக்கிய சகோதரர்கள் கைது
Byமாலை மலர்9 Jan 2021 2:16 PM GMT (Updated: 9 Jan 2021 2:16 PM GMT)
தட்டார்மடம் அருகே தகராறில் போலீசாரை தாக்கிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம்:
தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்தைச் சேர்ந்தவர் பொன்னம்பலநாதன் (வயது 45). நிலத்தரகரான இவருக்கும், மற்றொரு நிலத்தரகரான முதலூரைச்சேர்ந்த திரவியராஜ் (47) என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதில் திரவியராஜ் கார் சாவியை பொன்னம்பலநாதன் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகார் குறித்த விசாரணைக்கு பொன்னம்பலநாதனை அழைத்து வர தட்டார்மடம் போலீஸ் நிலைய தலைமை காவலர் கார்த்திக் அருணாச்சலம் (38), போலீஸ்காரர் ராஜேஷ் (28) ஆகியோர் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பொன்னம்பலநாதன், அவரது சகோதரர் சக்திக்குமார் (47) , உறவினர் பலவேசம் மகன் ராஜா (43) ஆகியோர் போலீசாரை தாக்கினர். இதில் காயமடைந்த கார்த்திக் அருணாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பான புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குபதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் பொன்னம்பலநாதன், அவரது சகோதரர் சக்திக்குமார் ஆகியோரை ஈரோட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X