search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகோதரர்கள் கைது"

    • வீட்டில் இந்திராணி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவில் வீட்டின் பக்கவாட்டு சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே புகுந்துள்ளனர்.
    • இந்திராணி பார்த்து விட்டதால், அவரிடம் மர்மநபர்கள் நகை பறிக்க முயன்றனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி இந்திராணி (வயது 48). இவர்களது மகன் பேச்சியப்பன் (24).

    நேற்று முன்தினம் இந்திராணி வழக்கம் போல் கதவை பூட்டிவிட்டு தூங்க சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அவர்கள் இந்திராணி வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. ஆனால் உள்ளே மின்விசிறி ஓடும் சத்தம் கேட்டது.

    இதுகுறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மணியாச்சி துணை சூப்பிரண்டு லோகேஷ்வரன், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அங்கு இந்திராணி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது வீட்டில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    வீட்டில் இந்திராணி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவில் வீட்டின் பக்கவாட்டு சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே புகுந்துள்ளனர். இதை இந்திராணி பார்த்து விட்டதால், அவரிடம் மர்மநபர்கள் நகை பறிக்க முயன்றனர். அதில் ஏற்பட்ட தகராறில் இந்திராணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். அதில் அதே பகுதியில் வசிக்கும் அண்ணன்-தம்பி 2 பேரும் சேர்ந்து மதுபோதையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த சம்பவத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேருக்கும் திருமணமாகவில்லை.

    தினமும் எந்த வேலைக்கும் செல்லாமல் மதுகுடித்துவிட்டு சுற்றித் திரிந்து வந்துள்ளனர். செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×