என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அழகர் கோவில் அருகே என்ஜினீயர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்8 Jan 2021 11:47 AM GMT (Updated: 8 Jan 2021 11:47 AM GMT)
அழகர்கோவில் அருகே என்ஜினீயர் வீட்டில் கதவை உடைத்து 46 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
மேலூர்:
அழகர் கோவில் அருகே உள்ள அ.வலையப்பட்டியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 70), சிவில் என்ஜினீயரான இவர் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார்.
சோமசுந்தரத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மதுரை மூன்று மாவடியில் தற்காலிகமாக வாடகைக்கு வீடு பார்த்து வசித்து வந்தார்.
நேற்று வலையப்பட்டி வீட்டுக்கு வந்த சோமசுந்தரம் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்மநபர்கள் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 46 பவுன் நகை, ரூ.18 ஆயிரம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து மேலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இந்த கொள்ளை குறித்து மேலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ரகுபதி ராஜா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அழகர் கோவில் அருகே உள்ள அ.வலையப்பட்டியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 70), சிவில் என்ஜினீயரான இவர் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார்.
சோமசுந்தரத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மதுரை மூன்று மாவடியில் தற்காலிகமாக வாடகைக்கு வீடு பார்த்து வசித்து வந்தார்.
நேற்று வலையப்பட்டி வீட்டுக்கு வந்த சோமசுந்தரம் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்மநபர்கள் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 46 பவுன் நகை, ரூ.18 ஆயிரம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து மேலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இந்த கொள்ளை குறித்து மேலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ரகுபதி ராஜா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X