search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை, பணம் கொள்ளை

    கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ்காலனியை சேர்ந்தவர் ராஜன் (வயது 49). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த போது பூட்டு உடைக்கப் பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 31 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×