என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி விமான நிலையத்தில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது - 4 பேர் கைது
Byமாலை மலர்29 Dec 2020 7:13 PM GMT (Updated: 29 Dec 2020 7:13 PM GMT)
திருச்சி விமான நிலையத்தில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
செம்பட்டு:
வெளிநாடுகளில் இருந்து திருச்சி மார்க்கமாக தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் இதுவரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விமானங்கள் இயக்கப்படவில்லை. தற்போது நிலையை சீரடைந்து வருவதால் உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு சார்பில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று நேற்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களது உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து சுமார் 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அந்தவகையில், செல்வராஜ் என்பவரிடம் இருந்து 1½ கிலோ தங்கமும், வெங்கடேசனிடம் இருந்து 250 கிராம் தங்கமும், செந்திலிடம் இருந்து 850 கிராம் தங்கமும், விஜய நடராஜனிடம் இருந்து 1½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது மற்றொரு நபர் தனது உடைமைகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். அதனைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து திருச்சி மார்க்கமாக தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் இதுவரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விமானங்கள் இயக்கப்படவில்லை. தற்போது நிலையை சீரடைந்து வருவதால் உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு சார்பில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று நேற்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களது உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து சுமார் 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அந்தவகையில், செல்வராஜ் என்பவரிடம் இருந்து 1½ கிலோ தங்கமும், வெங்கடேசனிடம் இருந்து 250 கிராம் தங்கமும், செந்திலிடம் இருந்து 850 கிராம் தங்கமும், விஜய நடராஜனிடம் இருந்து 1½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது மற்றொரு நபர் தனது உடைமைகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். அதனைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X