search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு உறுதி- அமைச்சர் செங்கோட்டையன்

    நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும். இந்தாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பில்லை.

    கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருந்த விவகாரத்தில் பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறுக்கு காரணமான பேராசிரியையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே இது குறித்து பேசியபோது முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பைஅமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
    Next Story
    ×