என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாடல்களில் வீரத்தை கொண்டு வரும் சக்தி பாரதிக்கு மட்டுமே உண்டு- நிர்மலா சீதாராமன் புகழாரம்
Byமாலை மலர்21 Dec 2020 3:21 AM GMT (Updated: 21 Dec 2020 3:21 AM GMT)
பாடல்களில் இனிமையிலும் வீரத்தை கொண்டு வரும் சக்தி பாரதிக்கு மட்டுமே உண்டு என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
சென்னை:
வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா பன்னாட்டு பாரதி திருவிழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
விழாவின் நிறைவு தின நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. பி.எஸ்.ராகவன் வரவேற்றார். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி எழுத்தாளர் சிவசங்கரி பாராட்டினார்.
விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து சபைகளிலும் பாரதியாரை பற்றி பாடி வருகிறார். பாரதியார் தன்னுடைய நிலையை ஒருபோதும் கூறியது இல்லை. நாட்டு மக்களை ஒன்று திரட்டி சுதந்திரம் அடைவதற்கு மக்கள் எப்படி இருக்க வேண்டும்? நாட்டில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை எடுத்து சொல்வதை மட்டுமே தனது கடமையாக வைத்திருந்தார்.
பாரதியாரின் பாடல்களில் சோர்வு, தளர்ச்சி, நம்பிக்கை இழப்பு, செயல்இழப்பு தன்மை இல்லை. இவை அவருடைய பாடல்களில் காணப்படாத உணர்ச்சிகள். வீரம், தன்னம்பிக்கை, நம்பிக்கை மட்டுமே அவருடைய பாடல்களில் இருந்தது. அவருடைய பாடலை கேட்டாலே நமக்கு வீரம் வந்துவிடும். தமிழ்ப்பற்று, தமிழ் புலமை இருந்தாலும் பாரத அன்னையின் தவப்புதல்வனாகவே உணர்ந்தவர். தமிழர்களை புகழ்ந்தாலும், பாரத நாட்டை பாடல்களில் இணைத்தவர். பாரத தாயை ஒவ்வொரு எண்ணத்திலும் ரசித்து பாடல்களை பாடியவர் பாரதியார்.
இனிமையிலும் வீரத்தை பாடல்களில் கொண்டு வரும் சக்தி பாரதிக்கு மட்டுமே உண்டு. கோபத்தை வெல்வது எவ்வளவு முக்கியம்? என்பதை பாடல்களில் எடுத்துக்காட்டு மூலமாக விளக்கி இருக்கிறார். தேச பக்தி, கவிதை, நாட்டுப்பற்று எல்லாவற்றையும் பாரதியை பற்றி குறிப்பிடும்போது சொல்கிறோம். பாரதியாரை எவ்வளவு படித்தாலும், நமக்கு புதிது, புதிதாக தோன்றிக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் வானவில் பண்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் ஷோபனா ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ரத்னா சிவராமன், விஜய் கிருஷ்ணா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
விழாவில் வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் கே.ரவி, பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், நட்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.
வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா பன்னாட்டு பாரதி திருவிழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
விழாவின் நிறைவு தின நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. பி.எஸ்.ராகவன் வரவேற்றார். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி எழுத்தாளர் சிவசங்கரி பாராட்டினார்.
விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து சபைகளிலும் பாரதியாரை பற்றி பாடி வருகிறார். பாரதியார் தன்னுடைய நிலையை ஒருபோதும் கூறியது இல்லை. நாட்டு மக்களை ஒன்று திரட்டி சுதந்திரம் அடைவதற்கு மக்கள் எப்படி இருக்க வேண்டும்? நாட்டில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை எடுத்து சொல்வதை மட்டுமே தனது கடமையாக வைத்திருந்தார்.
பாரதியாரின் பாடல்களில் சோர்வு, தளர்ச்சி, நம்பிக்கை இழப்பு, செயல்இழப்பு தன்மை இல்லை. இவை அவருடைய பாடல்களில் காணப்படாத உணர்ச்சிகள். வீரம், தன்னம்பிக்கை, நம்பிக்கை மட்டுமே அவருடைய பாடல்களில் இருந்தது. அவருடைய பாடலை கேட்டாலே நமக்கு வீரம் வந்துவிடும். தமிழ்ப்பற்று, தமிழ் புலமை இருந்தாலும் பாரத அன்னையின் தவப்புதல்வனாகவே உணர்ந்தவர். தமிழர்களை புகழ்ந்தாலும், பாரத நாட்டை பாடல்களில் இணைத்தவர். பாரத தாயை ஒவ்வொரு எண்ணத்திலும் ரசித்து பாடல்களை பாடியவர் பாரதியார்.
இனிமையிலும் வீரத்தை பாடல்களில் கொண்டு வரும் சக்தி பாரதிக்கு மட்டுமே உண்டு. கோபத்தை வெல்வது எவ்வளவு முக்கியம்? என்பதை பாடல்களில் எடுத்துக்காட்டு மூலமாக விளக்கி இருக்கிறார். தேச பக்தி, கவிதை, நாட்டுப்பற்று எல்லாவற்றையும் பாரதியை பற்றி குறிப்பிடும்போது சொல்கிறோம். பாரதியாரை எவ்வளவு படித்தாலும், நமக்கு புதிது, புதிதாக தோன்றிக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் வானவில் பண்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் ஷோபனா ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ரத்னா சிவராமன், விஜய் கிருஷ்ணா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
விழாவில் வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் கே.ரவி, பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், நட்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X