search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெய்க்காரப்பட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

    நெய்க்காரப்பட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்க்காரப்பட்டி:

    பழனியை அடுத்த அ.கலையம்புத்துரை சேர்ந்தவர் உதயசங்கர். அவருடைய மகள் சிவசங்கரி (வயது 22). கல்லூரி மாணவியான இவர், அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் அவர் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சிவசங்கரி, தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதேபோல் பழனி அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த வர்ஷினி (20) என்பவர், குடும்ப பிரச்சினை காரணமாக தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவங்கள் குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×