என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பென்னாகரம் அருகே மூதாட்டியை அடித்து கொன்ற தொழிலாளி கைது
Byமாலை மலர்14 Dec 2020 4:09 PM IST (Updated: 14 Dec 2020 4:09 PM IST)
பென்னாகரம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டியை அடித்து கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஆணைக்கல்லனூரை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி மதிமுனியம்மாள் (வயது 90). பெருமாள் இறந்து விட்டதால் மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு அதே ஊரை சேர்ந்த தொழிலாளி ராஜா (32) என்பவர் தேவையான உதவிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா, மூதாட்டி அணிந்து இருந்த நகையை பறித்துள்ளார். அவர் சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த ராஜா மூதாட்டியை அடித்து கொலை செய்து விட்டு காதில் அணிந்து இருந்த ½ பவுன் தோட்டை பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ராஜா நேற்று சத்தியநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேலிடம் சரணடைந்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், ராஜாவை பென்னாகரம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் மூதாட்டியை அடித்து கொன்ற ராஜாவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X