search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தோகைமலை அருகே மது விற்ற 2 பேர் கைது

    தோகைமலை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தோகைமலை:

    தோகைமலையில் உள்ள வடசேரி பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தோகைமலை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். 

    அப்போது வடசேரி ஊராட்சி, பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த பாலு (வயது 62) தனது பெட்டிக்கடையிலும், வடசேரி பெரியகுளம் கிழக்கு பகுதியில் உள்ள சீத்தமுள்ளுக்காட்டில் சின்னையன் என்பவரும் மது விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரிடம் இருந்து விற்பனைக்காக வைத்து இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×