என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் 31 கிலோ கஞ்சா பறிமுதல்: ரவுடி உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்11 Dec 2020 1:09 PM GMT (Updated: 11 Dec 2020 1:09 PM GMT)
மதுரையில் போலீசார் நடத்திய சோதனையில் 31 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை:
மதுரை தத்தனேரி வைகை வடகரை தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் 2 பேர் கஞ்சா விற்பதாக செல்லூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு ரகசிய தகவல் வந்தது.
இதன் அடிப்படையில் அவர் சக போலீசாருடன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அங்கு 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் எதுவும் சிக்கவில்லை.
எனவே போலீசார் கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் அடியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது அங்கு இரண்டு சாக்குப்பைகள் கைப்பற்றப்பட்டன. அந்த சாக்குப்பையில் 31 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் சிம்மக்கல் சுப்புராயர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த குமார் என்கிற ஜட்டி குமார் வயது 45 மற்றும் வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன் என்கிற கேடி கிருஷ்ணன் வயது 23 என்பது தெரியவந்தது
இதில் ஜட்டி குமார் மீது ஏற்கனவே செல்லூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனை தொடர்ந்து செல்லூர் போலீசார் 31 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஜட்டி குமார், கேடி கிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தத்தனேரி வைகை வடகரை தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் 2 பேர் கஞ்சா விற்பதாக செல்லூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு ரகசிய தகவல் வந்தது.
இதன் அடிப்படையில் அவர் சக போலீசாருடன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அங்கு 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் எதுவும் சிக்கவில்லை.
எனவே போலீசார் கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் அடியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது அங்கு இரண்டு சாக்குப்பைகள் கைப்பற்றப்பட்டன. அந்த சாக்குப்பையில் 31 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் சிம்மக்கல் சுப்புராயர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த குமார் என்கிற ஜட்டி குமார் வயது 45 மற்றும் வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன் என்கிற கேடி கிருஷ்ணன் வயது 23 என்பது தெரியவந்தது
இதில் ஜட்டி குமார் மீது ஏற்கனவே செல்லூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனை தொடர்ந்து செல்லூர் போலீசார் 31 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஜட்டி குமார், கேடி கிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X