என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆறுமுகநேரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்5 Dec 2020 12:10 AM GMT (Updated: 5 Dec 2020 12:10 AM GMT)
முதுகு தண்டில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மடத்துவிளை அருகில் உள்ள குரூஸ் நகர் காலனியை சேர்ந்தவர் ஜோசப் (வயது 63). இவருக்கு பெனிட்டா என்ற மனைவியும், அனுஷா, விஜயா என்ற 2 மகள்களும், மைக்கேல் என்ற மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகிறார்கள். ஜோசப் மீன் கடைகளில் மீன்களை வெட்டி கொடுக்கும் வேலை செய்து வந்தார். மேலும் சில நேரங்களில் இரவு காவலாளி வேலைக்கும் சென்று வந்தார். இவருக்கு கடந்த ஓராண்டாக முதுகு தண்டில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பூரணமாக குணமாகாத நிலையில் மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி பகலில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் இரவு வரை திரும்பவில்லை. இதனால் மனைவியும், மகனும் பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலையில் குரூஸ்நகர் காலனிக்கு மேல்புறம் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நின்ற உடை மரத்தில் ஜோசப் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து ஜோசப் மகன் மைக்கேல் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X