என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லிக்கு ரெயிலில் செல்ல முயன்ற 48 விவசாயிகள் கைது
Byமாலை மலர்4 Dec 2020 1:52 PM GMT (Updated: 4 Dec 2020 1:52 PM GMT)
திருச்சியில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் செல்ல முயன்ற 48 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 23-ந் தேதி திருச்சியிலிருந்து புறப்படத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அன்றைய தினம் போலீசார் அவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 70 விவசாயிகள் நேற்று காலை வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரெயில் நிலைய வாசலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
டெல்லி செல்வதற்கு அனுமதி இல்லை போலீசார் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் ரெயில் நிலையம் முன் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் அய்யாக்கண்ணு உள்பட 48 விவசாயிகளை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 23-ந் தேதி திருச்சியிலிருந்து புறப்படத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அன்றைய தினம் போலீசார் அவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 70 விவசாயிகள் நேற்று காலை வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரெயில் நிலைய வாசலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
டெல்லி செல்வதற்கு அனுமதி இல்லை போலீசார் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் ரெயில் நிலையம் முன் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் அய்யாக்கண்ணு உள்பட 48 விவசாயிகளை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X