என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அக்கா, தம்பி தீக்குளிக்க முயற்சி
Byமாலை மலர்4 Dec 2020 7:24 AM GMT (Updated: 4 Dec 2020 7:24 AM GMT)
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அக்கா, தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள நரியநேரி மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் லாவண்யா (வயது 32). மகன் சீனிவாசன் ( 29). முனுசாமி ஏற்கனவே 3 திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனிவாசன், லாவண்யா இருவரும் இன்று காலை திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலக வாசலில் வைத்து தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனை கண்டு திடுக்கிட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனடியாக அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
எனது தந்தை ஏற்கனவே 3 திருமணம் செய்துள்ளார். நாங்கள் எங்கள் தாத்தாவுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். அதனை காலி செய்யும்படி எனது தந்தை மற்றும் சித்தி குடும்பத்தினர் மிரட்டுகிறார்கள்.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் தீக்குளிக்க வந்தோம் என்றார்.
அவர்கள் இருவரையும் திருப்பத்தூர் டவுன் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள நரியநேரி மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் லாவண்யா (வயது 32). மகன் சீனிவாசன் ( 29). முனுசாமி ஏற்கனவே 3 திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனிவாசன், லாவண்யா இருவரும் இன்று காலை திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலக வாசலில் வைத்து தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனை கண்டு திடுக்கிட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனடியாக அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
எனது தந்தை ஏற்கனவே 3 திருமணம் செய்துள்ளார். நாங்கள் எங்கள் தாத்தாவுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். அதனை காலி செய்யும்படி எனது தந்தை மற்றும் சித்தி குடும்பத்தினர் மிரட்டுகிறார்கள்.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் தீக்குளிக்க வந்தோம் என்றார்.
அவர்கள் இருவரையும் திருப்பத்தூர் டவுன் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X