search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அவினாசியில் கைதி தப்பிக்க உதவிய தொழிலாளி கைது

    அவினாசியில் கைதி தப்பிக்க உதவிய தொழிலாளியை போலீசார் கைது செய்து திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து ஒலப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 20) பனியன் தொழிலாளி. இவர் கடந்த வாரம் 16 வயது பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக அப்பெண்ணின் தாயார் அவினாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஒலப்பாளையத்தை சேர்ந்த சிலர் தனபாலை தாக்கியுள்ளனர். இதனால் தனபால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

    அப்போது மாரிசாமி (32) என்பவர் மருத்துவமனையில் இருந்த போக்சோ சட்டத்தில் கைதான தனபாலை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து தப்பிக்க செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

    எனவே மாரிசாமியை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×