என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூர் அருகே மொபட்டில் வந்து செல்போன் பறித்த 2 பேர் கைது
Byமாலை மலர்28 Nov 2020 1:48 PM GMT (Updated: 28 Nov 2020 1:48 PM GMT)
சூலூர் அருகே மொபட்டில் வந்து செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர்:
கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது21). கார் மெக்கானிக். இவர் நேற்று சூலூர் பிரிவு அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று விஷ்ணுவின் செல்போனை பிடுங்கி விட்டு தப்பி செல்ல முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட விஷ்ணு, தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று, அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து சூலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த 2 பேரையும் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவா (27), நரேந்திரன் (23) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X