என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆறுமுகநேரி அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்- டிப்ளமோ என்ஜினீயர் பலி
Byமாலை மலர்27 Nov 2020 9:15 PM GMT (Updated: 27 Nov 2020 9:15 PM GMT)
ஆறுமுகநேரி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ். இவருடைய மகன் ரோகன் (வயது 19). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து இருந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் ஞானராஜ் மகன் பெல்ஜிஸ் (20). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரிக்கு புறப்பட்டு சென்றனர். பெல்ஜிஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
ஆறுமுகநேரி அருகே வேலவன் நகர் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் ரோகன், பெல்ஜிஸ் ஆகிய 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
உடனே அவர்களை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரோகன் பரிதாபமாக உயிரிழந்தார். பெல்ஜிசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X