என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெரினாவில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் - ஆந்திராவில் இருந்து கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்26 Nov 2020 9:37 PM GMT (Updated: 26 Nov 2020 9:37 PM GMT)
ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்
சென்னை:
மெரினாவில் கடலை ரசிக்க வருபவர்களை போலீசார் விரட்டி அடித்தபடி உள்ளனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதாலும், கொரோனா பிரச்சினையாலும் பொதுமக்கள் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மெரினா இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மாநகர பஸ்சை விட்டு இறங்கிய 2 பேர் தூக்க முடியாமல் சாக்கு மூட்டை ஒன்றை கஷ்டப்பட்டு தூக்கிச் சென்றனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாக்குமூட்டையில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. சாக்குமூட்டையில் இருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ரவிகுமார் (வயது 49), நாகேஸ்வரராவ் (35) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மெரினாவில் கடலை ரசிக்க வருபவர்களை போலீசார் விரட்டி அடித்தபடி உள்ளனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதாலும், கொரோனா பிரச்சினையாலும் பொதுமக்கள் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மெரினா இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மாநகர பஸ்சை விட்டு இறங்கிய 2 பேர் தூக்க முடியாமல் சாக்கு மூட்டை ஒன்றை கஷ்டப்பட்டு தூக்கிச் சென்றனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாக்குமூட்டையில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. சாக்குமூட்டையில் இருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ரவிகுமார் (வயது 49), நாகேஸ்வரராவ் (35) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X