என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை மெட்ரோ ரெயில் நாளை இயங்கும்: நிர்வாகம்
Byமாலை மலர்24 Nov 2020 3:21 PM GMT (Updated: 24 Nov 2020 3:21 PM GMT)
சென்னை மெட்ரோ ரெயில் நாளை விடுமுறை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்கான ரெயில்கள், புறநகர் ரெயில்கள், பெரும்பாலான மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுத்துறையில் பணிபுரியும் நபர்களை தவிர்த்து மற்ற துறைகளைச் சார்ந்த அனைவருக்கும் அரசு விடுமுறை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
பால் விற்பனை, பெட்ரோல், டீசல் பங்க்-கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை மெட்ரோ ரெயில் விடுமுறை கால அட்டவணைப்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி இயக்கப்படும். 10 நிமிடத்திற்கு ஒரு ரெயில் என இடைவெளி விட்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X