search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் தையல்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    திருப்பூர் அருகே தையல்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வீரபாண்டி:

    கடலூர் மாவட்டம் தோட்டம் குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 34). இவர் திருப்பூர் முருகம்பாளையம் சூர்யா கிருஷ்ணா நகரில் கடந்த 6 வருடங்களாக தனது மனைவி, மகளுடன் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாத காலமாக போதிய வேலை இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த வாரம் தனது மகள் மற்றும் மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டு தனியாக வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் கதவை தாழிட்டுக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அருகில் இருந்தவர்கள் கவனித்து கதவை உடைத்து சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×