search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருச்செந்தூர் அருகே டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

    திருச்செந்தூர் அருகே டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் குமாரபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 66) . இவர் அங்குள்ள கேஸ் குடோன் எதிர்புறம் டீக்கடை நடத்தி வருந்தார். அவருக்கு மனைவி முருகேஸ்வரி, மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பால்பாண்டிக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அவரது டீக்கடை அருகில் ஆஸ்பெட்டாஷ் சீட்டின் கம்பியில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×