என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தையல் தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்22 Nov 2020 1:06 PM GMT (Updated: 22 Nov 2020 1:06 PM GMT)
தையல் தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரபாண்டி:
மதுரை மாவட்டம் பேருரை சேர்ந்த கருப்பையன் (வயது 41). இவர் திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தங்கி தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துக்கொண்டு முருகம்பாளையம் சுண்டமெடு பகுதியில் தனது நண்பருடன் செல்போனில் பேசிக் கொண்டு வந்தார். அப்போது அவ்வழியாக 3 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக வந்து கருப்பையன் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து கருப்பையன் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சி உதவியுடன் விசாரணை தொடங்கினர். விசாரணையில் திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (20), மதுரை மாவட்டம் குளம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா (22) மற்றும் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவா (19) ஆகிய 3 பேரும் செல்போன் பறித்துச் சென்றது தெரியவந்தது. மூவரையும் போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். திருப்பூர் புறநகர் பகுதிகளில் இதுபோன்று தனியாக செல்போனில் பேசி செல்லும் நபர்களை குறிவைத்து தொடர்ந்து செல்போன் பறிப்பது அதிகரித்து வருவது அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X