என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
Byமாலை மலர்20 Nov 2020 1:40 PM GMT (Updated: 20 Nov 2020 1:40 PM GMT)
விழுப்புரத்தில் சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மாதா கோவிலில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் பாதையில் 2-வது தெருவில் நான்குமுனை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறிய பள்ளம் உருவானது. இந்த பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினரோ அல்லது நெடுஞ்சாலைத்துறையினரோ உரிய நடவடிக்கை எடுக்காமல் அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இதன் விளைவு சிறியதாக இருந்த பள்ளம் தற்போது பெரிய அளவில் உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். சாலையோரமுள்ள இந்த பள்ளத்தால் முதியவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் அவ்வழியாக செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சற்று அதிவேகமாக வந்தால் அவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும்.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் இந்த பள்ளத்தை மூடாமல் விட்டால் விபத்து ஏற்பட்டு உயிர்பலியாக வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே இப்பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள், பொதுமக்களின் அச்சத்தை போக்கிடும் வகையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல், காவு வாங்குவதற்காக காத்திருக்கும் அந்த பள்ளத்தை மூடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மாதா கோவிலில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் பாதையில் 2-வது தெருவில் நான்குமுனை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறிய பள்ளம் உருவானது. இந்த பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினரோ அல்லது நெடுஞ்சாலைத்துறையினரோ உரிய நடவடிக்கை எடுக்காமல் அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இதன் விளைவு சிறியதாக இருந்த பள்ளம் தற்போது பெரிய அளவில் உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். சாலையோரமுள்ள இந்த பள்ளத்தால் முதியவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் அவ்வழியாக செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சற்று அதிவேகமாக வந்தால் அவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும்.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் இந்த பள்ளத்தை மூடாமல் விட்டால் விபத்து ஏற்பட்டு உயிர்பலியாக வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே இப்பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள், பொதுமக்களின் அச்சத்தை போக்கிடும் வகையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல், காவு வாங்குவதற்காக காத்திருக்கும் அந்த பள்ளத்தை மூடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X