என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு
Byமாலை மலர்20 Nov 2020 9:14 AM GMT (Updated: 20 Nov 2020 9:14 AM GMT)
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பைபாஸ் சாலையில் இரும்பு கடை நடத்தி வருபவர் பாத்தப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (43). நேற்று காலை வழக்கம் போல கடையை திறக்க சென்ற அவர், கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.70 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பித்தளை, தாமிர மற்றும் இரும்பு வால்வுகளை திருடிச் சென்றது தெரியவந்து.
மேலும் கடந்த ஒரு மாத காலமாகவே கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் தொடர்ந்து இரும்பு கடைகளின் பூட்டை உடைத்து இத்தகைய திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது அந்த பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு கடையின் பூட்டை உடைத்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பைபாஸ் சாலையில் இரும்பு கடை நடத்தி வருபவர் பாத்தப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (43). நேற்று காலை வழக்கம் போல கடையை திறக்க சென்ற அவர், கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.70 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பித்தளை, தாமிர மற்றும் இரும்பு வால்வுகளை திருடிச் சென்றது தெரியவந்து.
மேலும் கடந்த ஒரு மாத காலமாகவே கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் தொடர்ந்து இரும்பு கடைகளின் பூட்டை உடைத்து இத்தகைய திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது அந்த பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு கடையின் பூட்டை உடைத்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X