search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
    X
    போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

    சென்னையில் 72 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்- போலீஸ் கமிஷனர் உத்தரவு

    சென்னையில் 72 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்தார்.
    சென்னை:

    சென்னையில் 72 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்தார். இதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 39 இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    பெரும்பாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பதவி, நசரத்பேட்டை குற்றப்பிரிவு, ராயலாநகர்-2, முக்தா புதுப்பேட்டை குற்றப்பிரிவு, கொளத்தூர் குற்றப்பிரிவு, அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை ஆகிய 10 இன்ஸ்பெக்டர்கள் பதவியும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

    அசோக்நகருக்கு கலைஅரசன், வியாசர்பாடிக்கு சிவகுமார், அரும்பாக்கத்திற்கு எம்.சரவணன், கோட்டைக்கு ரகுநாத், செங்குன்றத்திற்கு சங்கர், நந்தம்பாக்கத்திற்கு சிபுகுமார், மீனம்பாக்கத்திற்கு செந்தில்முருகன், திருமுல்லைவாயலுக்கு சாம்வின்சென்ட், ஆயிரம்விளக்கிற்கு ஜானிசெல்லப்பா, மீன்பிடி துறைமுகத்திற்கு வினோத்குமார், ஐகோர்ட்டுக்கு கணேஷ்பாண்டியன், வட பழனிக்கு புருஷோத்தமன், அயனாவரத்திற்கு அய்யப்பன், மயிலாப்பூருக்கு மீனாட்சிசுந்தரம், பட்டினபாக்கத்திற்கு நவாஷ், பெரும்பாக்கத்திற்கு ரஞ்சித்குமார், விருகம்பாக்கத்திற்கு மகுடீஸ்வரி ஆகியோர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×