என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்18 Nov 2020 8:31 AM GMT (Updated: 18 Nov 2020 8:31 AM GMT)
சேந்தமங்கலம் அருகே குடும்ப தகராறில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 43). லாரி டிரைவர். இவருடைய மனைவி தனம் (35). நேற்று முன்தினம் சின்னதுரை குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.
அதை பார்த்த தனம், கணவர் சின்னதுரையை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சின்னதுரை அங்குள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று மரத்தில் கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் மரத்தில் பிணம் தொங்குவதை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து சின்னதுரை குடும்பத்தினருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பதறியடித்து ஓடி சென்ற தனம் கணவர் உடலைப்பார்த்து கதறி அழுதார். இதன்பின்னர் சேந்தமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரை உடலை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னதுரைக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
குடும்ப தகராறில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X