search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கள்ளத்தொடர்பை கைவிடாததால் பெண் வெட்டிக்கொலை- உறவினர்கள் 2 பேர் சிக்கினர்

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கள்ளத்தொடர்பை கைவிடாததால் பெண்ணை வெட்டிக்கொலை செய்தது தொடர்பாக உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாகுடியை அடுத்த செங்குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முத்து பாண்டி (வயது 40).

    இவர் தூத்துக்குடியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முப்புடாதி (35). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    முப்புடாதி சென்னையில் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அவருக்கு வேலை இல்லாததால், சொந்த ஊருக்கு வந்து கணவருடன் வசித்து வந்தார்.

    முத்துபாண்டி தினமும் அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்புவார். நேற்று இரவு 10 மணிக்கு அவர் வேலை முடிந்து வீடு திரும்பினார்.

    அப்போது அவரது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் முப்புடாதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, கை மற்றும் உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துப்பாண்டி, பாப்பாக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு பாப்பாக்குடி போலீசார் விரைந்து வந்து முப்புடாதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

    முத்துப்பாண்டி பகலில் வேலைக்கு சென்று விட்டு தினசரி இரவில் தான் வீட்டுக்கு வருவார். இதனால் பகலில் தனிமையில் இருந்த முப்பிடாதிக்கு அந்த பகுதியை சேர்ந்த 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது.

    இது முத்துப்பாண்டியின் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் முப்பிடாதியை எச்சரித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி, முப்பிடாதி தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டியின் உறவினர்கள் நேற்று இரவு, வீட்டில் தனியாக இருந்த முப்பிடாதியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி இன்று கொலை செய்ததாக கருதப்படும் துர்கை முத்து, பிரேம் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×