என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்17 Nov 2020 6:52 AM GMT (Updated: 17 Nov 2020 6:52 AM GMT)
கோவை அருகே தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி மோட்டார்சைக்கிளை பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை புலியகுளம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24) . தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 14-ந் தேதி மோட்டார் சைக்கிளில் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர், பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டில் வந்த போது 2 மர்ம ஆசாமிகள் திடீரென்று வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். உடனே அவர்கள் சக்திவேலை மிரட்டி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றனர்.
இதனை சுதாரித்துக் கொண்ட சக்திவேல், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் புலியகுளம் கருப்பண்ணன் கோவில் பகுதியை சேர்ந்த உதயா விக்ரம் (20), மற்றொருவர் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் உதயா விக்ரம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X