என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் துணிக்கடைகளின் மேற்கூரையில் துளையிட்டு பணம் திருட்டு
Byமாலை மலர்17 Nov 2020 6:45 AM GMT (Updated: 17 Nov 2020 6:45 AM GMT)
தர்மபுரியில் துணிக்கடைகளின் மேற்கூரையில் துளையிட்டு பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் தர்மபுரியில் சேலம் மெயின்ரோட்டில் ரெடிமேட் துணிக்கடைகள் நடத்தி வருகிறார். இந்த 2 கடைகளும் ஒரே கட்டிடத்தில் அருகருகே அமைந்துள்ளன. தீபாவளி பண்டிகையின்போது இந்த 2 கடைகளில் விற்பனை நடைபெற்றது. பின்னர் கடைகளை பூட்டி விட்டு சதீஷ்குமார் மற்றும் ஊழியர்கள் வீடுகளுக்கு சென்றனர். இந்த நிலையில் மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது 2 துணிக்கடைகளிலும் பொருட்கள் சிதறி இருந்தன. கடைகளின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. மேற்கூரையில் துளையிட்டு கடைகளின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியானது. இதுதொடர்பாக சதீஷ்குமார் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X