search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி திருமணம் நிறுத்தம்
    X
    சிறுமி திருமணம் நிறுத்தம்

    சமயபுரத்தில் நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

    சமயபுரத்தில் நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்திய போலீசார் சிறுமியை திருச்சியிலுள்ள குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    சமயபுரம்:

    சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று காலை சமயபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணி அளவில் கடைவீதியில் சுமார் 16 வயதுடைய ஒரு சிறுமி வாலிபர் ஒருவருடன் நின்று கொண்டிருந்தாள்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் கட்டிட தொழிலாளியான அந்த வாலிபர், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள இலையூரை சேர்ந்த கருணாநிதியின் மகன் வெற்றிவேல் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமி வெற்றிவேலை திருமணம் செய்ய கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

    தற்போது, சமயபுரம் கோவிலில் இருவரும் திருமணம் செய்வதற்காக வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை திருச்சியிலுள்ள குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வெற்றிவேலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×