search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாவட்டம் முழுவதும் 27 ரவுடிகள் உள்பட 58 பேர் கைது

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் 27 ரவுடிகள் உள்பட 58 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் கடந்த சில நாட்களாக போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடந்த சோதனையின்போது அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 27 ரவுடிகள், கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த 6 பேர், பணம் வைத்து சூதாடிய 9 பேர் மற்றும் குட்கா விற்பனை செய்த 16 பேர் உள்பட மொத்தம் 58 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அடிதடி வழக்குகள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட 15 ரவுடிகள் உதவி கலெக்டர்கள் முன்பு நிறுத்தி, நன்னடத்தையை பேணுவதற்கான பிணையம் பெறப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×