என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்னந்தோப்பில் பதுக்கிய 4 டன் வெடிபொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்2 Nov 2020 1:42 AM GMT (Updated: 2 Nov 2020 1:42 AM GMT)
போடி அருகே தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 4 டன் வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி:
தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி அணைக்கரைப்பட்டி தங்கப்பாலம் அருகே, வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
அப்போது அணைக்கரைப்பட்டி தங்கப்பாலம் அருகே ஒரு தென்னந்தோப்பில் உள்ள மோட்டார்அறையை போலீசார் சோதனையிட்டனர். அங்கு 15 அட்டை பெட்டிகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது, 3 டன் வெடி மருந்து மற்றும் ஒரு டன் டெட்டனேட்டர்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போடி துரைராஜபுரத்தை சேர்ந்த கல்குவாரி உரிமையாளரான முருகப்பா (வயது 53) மற்றும் ஊழியர்கள் குமரேசன் (45), பெருமாள் (40) ஆகியோர் உரிய அனுமதியின்றி வெடிபொருட் களை பதுக்கி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி அணைக்கரைப்பட்டி தங்கப்பாலம் அருகே, வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
அப்போது அணைக்கரைப்பட்டி தங்கப்பாலம் அருகே ஒரு தென்னந்தோப்பில் உள்ள மோட்டார்அறையை போலீசார் சோதனையிட்டனர். அங்கு 15 அட்டை பெட்டிகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது, 3 டன் வெடி மருந்து மற்றும் ஒரு டன் டெட்டனேட்டர்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போடி துரைராஜபுரத்தை சேர்ந்த கல்குவாரி உரிமையாளரான முருகப்பா (வயது 53) மற்றும் ஊழியர்கள் குமரேசன் (45), பெருமாள் (40) ஆகியோர் உரிய அனுமதியின்றி வெடிபொருட் களை பதுக்கி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X