என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
14 வயது சிறுமிக்கு திருமணம் - புதுமாப்பிள்ளை உள்பட 5 பேர் கைது
Byமாலை மலர்1 Nov 2020 12:45 PM GMT (Updated: 1 Nov 2020 12:45 PM GMT)
14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக புதுமாப்பிள்ளை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சிங்கிலியன்கோம்பை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 28). இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் அங்குள்ள விநாயகர் கோவிலில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்துருட்டு கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரி மங்களபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, மங்களபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சொக்கநாதபுரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சட்டத்தை மீறி குழந்தை திருமணம் நடத்திய புதுமாப்பிள்ளை முத்துக்குமார், அவருடைய தந்தை அங்கமுத்து (50), தாய் ஜோதி (45) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் 5 பேரையும் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து முத்துக்குமார், அங்கமுத்து உள்பட 3 பேரை ராசிபுரம் சிறையிலும், ஜோதி உள்பட 2 பேரை சேலத்தில் உள்ள பெண்கள் சிறையிலும் போலீசார் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X