search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கோவையில் ஆற்றில் குளிக்கச்சென்ற 2 வாலிபர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

    கோவையில் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற 2 வாலிபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை பாப்பநாயக்கன் புதூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் பிரபாகரன். இவர்கள் இருவரும் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள கைகாட்டி பிரிவு பாலத்தின் கீழ் குளிக்கச் சென்றனர். அப்போது தமிழ்ச்செல்வன் 20 அடி ஆழத்தில் சேற்றில் சிக்கிக் கொண்டார். நண்பனை காப்பாற்றுவதற்காக சென்ற பிரபாகரனும் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவலளித்தனர்.

    மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி இருவரது உடல்களையும் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். இது குறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×