search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மிளகாய் பொடி தூவி வாலிபரிடம் செல்போன் பறிப்பு - 3 பேர் கைது

    பழனி அருகே மிளகாய் பொடி தூவி வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பழனி:

    பழனி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 18). நேற்று முன்தினம் இரவு இவர், பட்டத்து விநாயகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 3 வாலிபர்கள் வழி மறித்து மிளகாய்பொடி தூவினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.300 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். உடனே மணிகண்டன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தப்பியோடிய 3 பேரையும் மடக்கி பிடித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பழனி பத்ரா தெருவை சேர்ந்த இருளப்பன் (22), ராஜாஜி தெருவை சேர்ந்த சதீஷ்குமார்(19), பொன்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் (19) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×