என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்26 Oct 2020 1:44 PM GMT (Updated: 26 Oct 2020 1:44 PM GMT)
தூத்துக்குடியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அதில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி 3-ம் மைல் மேம்பாலம் அருகே புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அதில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தரமில்லாத சாலையை அமைத்த அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும். மீண்டும் தரமான சாலை அமைக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மாநகர தலைவர் காஸ்ட்ரோ, மாநகர பொருளாளர் பாலா, ஜாய்சன், ஜேம்ஸ் முத்துகிருஷ்ணன், ஆவுடையப்பன், ஜெய முருகன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X