என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிகிச்சைக்காக சென்னைக்கு சென்ற தபால் ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்25 Oct 2020 9:11 AM GMT (Updated: 25 Oct 2020 9:11 AM GMT)
வாணியம்பாடி அலுகே சிகிச்சைக்காக சென்னைக்கு சென்ற தபால் ஊழியர் வீட்டின் கதவுகளை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 60). இவர், புத்துக்கோவில் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 18-ந் தேதி சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
இதனையடுத்து அங்கிருந்து நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த 25 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 60). இவர், புத்துக்கோவில் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 18-ந் தேதி சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
இதனையடுத்து அங்கிருந்து நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த 25 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X