என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது
Byமாலை மலர்24 Oct 2020 2:36 PM GMT (Updated: 24 Oct 2020 2:36 PM GMT)
தஞ்சை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சோதனை நடத்தினர். தஞ்சை நகரில் மட்டும் பழைய பஸ் நிலையம், பூச்சந்தை, தெற்கு அலங்கம், பகுதியில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சை கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பேரை கைது செய்தனர். இதேபோல் போலீசார் மாவட்ட முழுவதும் மேற்கொண்ட சோதனையில் பட்டுகோட்டை பகுதியில் ஒருவரும், திருச்சிற்றம்பலம் பகுதியில் 2 பேரும், அய்யம்பேட்டையில் ஒருவர் என மாவட்டம் முழுவதும் 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X