search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கள்ளக்குறிச்சியில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 10 ஆயிரத்து 74 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 102 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று 570 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 21 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 74-ல் இருந்து 10 ஆயிரத்து 95-ஆக உயர்ந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும் இதை அலட்சியமாக கருதாமல் பொதுமக்கள் முகவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு பணியில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×