என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்கூட்டர் மீது ஆம்புலன்ஸ் மோதல்: கல்லூரி மாணவிகள் 3 பேர் காயம்
Byமாலை மலர்24 Oct 2020 8:06 AM GMT (Updated: 24 Oct 2020 8:06 AM GMT)
தஞ்சை அருகே ஸ்கூட்டர் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் காயம் அடைந்தனர்.
கள்ளப்பெரம்பூர்:
தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மகள்கள் கார்த்திகா(வயது18), திவ்யா(17). இவர்களின் தோழி செந்தமிழ்செல்வி(20). கல்லூரி மாணவிகளான இவர்கள் 3 பேரும் ஒரு ஸ்கூட்டரில் நேற்று காலை திருவையாறு -தஞ்சை புறவழிச்சாலையில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சக்கரசாமந்தம் புறவழிச்சாலை அருகே இவர்கள் சென்ற போது மாணவிகள் சென்ற ஸ்கூட்டரும் அந்த வழியாக வந்த ஆம்புலன்சும் மோதிக்கொண்டன. இதில் மாணவிகள் கார்த்திகா, திவ்யா, செந்தமிழ்செல்வி ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X