என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடியில் மோட்டார்சைக்கிள்கள், செல்போன் திருடிய 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்24 Oct 2020 7:53 AM GMT (Updated: 24 Oct 2020 7:53 AM GMT)
மன்னார்குடியில் மோட்டார்சைக்கிள்கள், செல்போன் ஆகியவற்றை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-மதுக்கூர் சாலை அருகில் உள்ள தனியார் காலனியில் வசிப்பவர் சரவணன் (வயது48). மன்னார்குடி தாயார் நகரில் வசிப்பவர் அன்பழகன் (29). இவர்களது 2 பேரின் மோட்டார்சைக்கிள்களும் திருட்டு போனது. இதேபோல் மன்னார்குடி வாணகார தெருவை சேர்ந்த மதிவாணன் (63) என்பவரின் ரூ. 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போனது. இதுகுறித்து சரவணன், அன்பழகன், மதிவாணன் ஆகியோர் மன்னார்குடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களை தேடிவந்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திருவாரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் சென்றார். உடனடியாக அவரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மன்னார்குடி மதுக்கூர் சாலை பகுதியை சேர்ந்த ஜெரால்டு (20) என்பதும், தனது கூட்டாளிகள் சஞ்சை (20), மணிகண்டன் (22) ஆகியோருடன் சேர்ந்து மோட்டார்சைக்கிள்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைதுசெய்து, அவர்களிடம் இருந்த செல்போன், மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-மதுக்கூர் சாலை அருகில் உள்ள தனியார் காலனியில் வசிப்பவர் சரவணன் (வயது48). மன்னார்குடி தாயார் நகரில் வசிப்பவர் அன்பழகன் (29). இவர்களது 2 பேரின் மோட்டார்சைக்கிள்களும் திருட்டு போனது. இதேபோல் மன்னார்குடி வாணகார தெருவை சேர்ந்த மதிவாணன் (63) என்பவரின் ரூ. 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போனது. இதுகுறித்து சரவணன், அன்பழகன், மதிவாணன் ஆகியோர் மன்னார்குடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களை தேடிவந்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திருவாரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் சென்றார். உடனடியாக அவரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மன்னார்குடி மதுக்கூர் சாலை பகுதியை சேர்ந்த ஜெரால்டு (20) என்பதும், தனது கூட்டாளிகள் சஞ்சை (20), மணிகண்டன் (22) ஆகியோருடன் சேர்ந்து மோட்டார்சைக்கிள்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைதுசெய்து, அவர்களிடம் இருந்த செல்போன், மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X