search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மக்கள் ஷாப்பிங் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கம்

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக கூடுதல் பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாட்களில் 50 கூடுதல் பஸ் இயக்கப்படுகிறது. 

    7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் 50 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 24,25,26ம் தேதி வரையும், 31 மற்றும் நவம்பர் 1ம் தேதி, நவ.7 மற்றும் 8ம் தேதி 7 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.

    தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுவர ஏதுவாக பேருந்துகள் இயக்கப்படும். சிறப்புப் பேருந்தை எளிதில் அறிய அவற்றின் முகப்பில் Deepavali shopping special ஸ்டிக்கர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×